Tuesday, March 24, 2015

நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய் ?

நாம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய் ?

நம் முன்னோர்கள் அந்த நாட்களில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்  நல்ல எண்ணெயையும் அப்படியே உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இந்த மூன்று குணங்களுக்கும் காரணம் அந்த எண்ணெய் களில் உள்ள ஊட்டச் சத்துக்கள்தான். இதனால் உடல் ஆரோக்கியத் திற்குத் தேவையான புரோட்டீன்கள்,வைட்டமின்கள், தாதுபொருட்கள் நார்ச்சத்துக்கள், குளோரபில், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் 'இ' போன்றவை நமக்கு கிடைத்து வந்தன. இந்தத் தாதுப் பொருள்களின் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தைத் தடுத்தன. நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தார்கள். எல்லா எண்ணெய்களையும் விட நல்லெண்ணெய்க்கு ஒரு சிறப்பு உண்டு. எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக நல்ல எண்ணெய் என்று சொன்னார்கள். வெளிநாட்டில் இதை 'க்யூன் ஆஃப் ஆயில்ஸ்' அதாவது 'எண்ணெய்களின் அரசி' என்று பெயரிட்டு அழைத்தார்கள். இதை உணவுக்கு மட்டுமன்றி,குளியலுக்கும் மசாஜ் செய்வதற்கும் உபயோகித்து வந்த காரணத்தால்  அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி ஊர் முழுவதும் கால்நடையாகவே சென்று வந்தனர். ஆனால் இன்றைக்கு நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பதுதான் ஒரு அதிர்ச்சியான உண்மை. சுத்தமான நல்லெண்ணெயின் விலை இன்றைக்கு அதிகம் என்பதால் அதில் கலப்படம் செய்கிறார்கள். அதாவது பாமாயில், மற்றும் ரைஸ் ப்ரௌன் ஆயில் இந்த இரண்டையும் கலந்து நல்லெண்ணெயைப் போல் விற்கிறார்கள்.
சரி! ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாராகிறது என்று பார்ப்போமா? காஸ்டிக் சோடாவை கலப்பட எண்ணெயோடு சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக்கை அமிலத்தின் மூலம் அகற்றி நியூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனைகளை அறவே நீக்கி விடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக் ஷன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.இதையெல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரை மறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்குத் தெரியாத காரணத்தால் சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் என்று நினைத்து உபயோகித்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் அடர்த்தியில்லாத தண்ணீர் போன்ற திரவம். சமையலுக்கு இதைப் பயன்படுத்தும்போது இது சூடு தாங்காமல் உருகுலைந்து உடல் ஆரோக்கியத்திற்குத் தீமை விளைவி க்கும் ஒரு ரசாயனக் கலவையாய் மாறுகிறது. செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்கையான எண்ணெயை சூடு படுத்தினால் அது ரசாயனக் கலவையாய் மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்குக் கிடைக்கும்.
எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதற்காக பெரிய தொகைகளை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ரசாயனப் பொருட்களால் பாழ்படுத்தப்பட்ட  - உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒரு திரவத்தை 'ரீஃபைண்ட் ஆயில் ' என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும், மெடிக்கல் கவுன்சில்களும் எப்படி அனுமதி அளிக்கின்றன? நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்? நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் காரணம் சுற்றுச் சூழல் மாசுப்பட்டிருப்பதுதான் என்று சொல்லி நம்மை நாமே ஆறுதல்படுத்திக் கொள்கிறோம். கடந்த 60, 70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில். விஞ்ஞானம் வளர்ந்து கொண்டு இருக்கிறது அதற்கு ஏற்றாற்போல நாமும் மாறவேண்டும் என்று சிலர் சொல்லக்கூடும்.விஞ்ஞானம் தொழில் துறையில் இருக்கலாம். நம்முடைய உணவோடு அந்த விஞ்ஞானம் விளையாடக் கூடாது.



No comments: